பல தொழிற்சங்கங்கள் இணைந்து கொழும்பில் இன்று சத்தியாக்கிரகம்

175 0

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் எனக் கோரி அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மேலும் சில தொழிற்சங்கங்த்தினர் இணைந்து கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள், மாணவர்களுக்கான இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி முன்னெடுத்துவரும் தொழிற்சங்கப் போராட்டம் 31ஆவது நாளாக இன்றும் தொடருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், கொழும்பில் இன்று நடைபெறவுள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இலங்கை வங்கி சேவையாளர் சங்கம், அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட மேலும் பல தொழிற்சங்கங்களின் தலைவர்கள் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.