இ.போ.சபையின் முல்லைத்தீவு சாலை ஊழியர்கள் இருவர் போராட்டம்!

150 0

இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலை ஊழியர்கள் இருவர் இன்று பேருந்து சாலை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு சாலையில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் செயற்பாட்டிற்கு நீதிகோரி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.

இதன்போது வடபிராந்திய பிரதான முகாமையாளர் எஸ்.குணபாலச்செல்வன் சம்பவ இடத்திற்கு வருகைதந்து கவனயீர்ப்பு போராட்டகாரர்களின் பிரச்சினையினை கேட்டறிந்து கொண்டுள்ளார்.