கொரோனா தொற்றினால் உயிரிழந்த 42 பேரின் உடல்களை தகனம் செய்யும் பணிகள் ராகமவில் ஆரம்பம்

185 0

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 42 பேரின் உடல்களை தகனம் செய்யும் பணிகளை ராகமவிலுள்ள அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

ராகம போதனா வைத்தியசாலையில் சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

இராஜாங்க அமைச்சரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் லான்சா நேற்று மாலை 6 மணியளவில் பெரும்பாலான உடல்கள் எரிக்கப்பட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள உடல்கள் அடுத்த சில நாட்களில் தகனம் செய்யப்படவுள்ளன.

உயிரிழந்த சிலரின் உறவினர்கள் தூர இடங்களில் இருக்கின்றமையால், அது தொடர்பில் உறுதி செய்வதற்கு சில நாட்கள் எடுக்கும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய நோய்களால் உயிரிழந்த மேலும் 40 பேரின் உடல்கள் ராகம போதனா வைத்தியசாலை பிணவறையில் குவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடற்ற மக்கள் மற்றும் மற்றவர்கள் யாரும் உரிமை கோராத சடலங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

40 உடல்களை அப்புறப்படுத்த இன்று நீதிமன்ற உத்தரவு கோரப்படவுள்ளது. அனைத்து உடல்களையும் அப்புறப்படுத்திய பின், மருத்துவமனையில் எவ்வித பின்னடைவும் இல்லை என்பதை உறுதி செய்ய முறையான அமைப்பு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ராகம போதனா வைத்தியசாலை கொரோனா தொற்றினால் மோசமாக பாதிப்படைந்துள்ளது.

அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருவதால் , அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய மருத்துவமனைக்கு மேலதிக படுக்கைகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.