மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரிப்பு

292 0

வவுனியா – மதவுவைத்தகுளம் பிரதேசத்தில், மர்ம மனிதர்களின் நடமாட்டம் கடந்த இரு
வாரங்களாக அதிகரித்துள்ளதாக, அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மதவுவைத்தகுளம் பிரதேசத்தில், கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காணாத வகையில்
உடம்பு முழுவதுமாக நிறப் பூச்சுகளை பூசிக்கொண்டு நிர்வாணமாக சிலர் சுற்றித்திரிகின்றனர்.

பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை இலக்கு வைத்தும், குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாத
நேரங்களில் வீடுகளில் புகுந்தும் வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களிடம் தகாத முறையில்
நடந்துகொள்ளவும் இந்த மர்மான மனிதர்கள் முயன்றுள்ளனர்.

குறித்த மர்ம மனிதர்களின் அட்டூழியங்கள் கடந்த இரு வாரங்களாக அதிகரித்த நிலையில்,
மதவுவைத்த குளத்தில் வாழும் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
என்றும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த விடயம் குறித்து, பிரதேச மக்கள் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபரிடம், முறைப்பாடு
செய்தும் அவர்கள் குறித்த விடயம் தொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கையும்
மேற்கொள்ளவில்லை எனவும், மர்ம மனிதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால்,
குறித்த பிரதேச மக்கள் நிம்மதியாக இரவு நேரங்களில் இருக்க முடியாது எனவும், மக்கள்
தெரிவித்துள்ளனர்.