சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய நபர் கைது

208 0

சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் கா ணொளிகளை இணையத்தளத்தில் பதிவேற்றிய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் படல்கும்புற பகுதியில் வைத்து இன்று காலை சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரி வினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

25 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிறுவர்கள் தொடர்பான 500 ஆபாச படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இதற்காகப் பயன் படுத்திய துணைக்கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர் சிறுவர்களை முறையற்ற விதத்தில் காண்பிக்கும் வகையிலான காணொளிகளையும் புகைப் படங்களையும் பெற்றுக்கொண்டு அவற்றைப் போலி யான சமூக வலைத்தள இரண்டு கணக்குகள் ஊடாக நாளாந்தம் பதிவேற்றியுள்ளமை தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபடவுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.