உயிர்த்த ஞாயிறு குண்டுதாரியின் தந்தை விடுதலை

149 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொச்சிக்கடை தேவலாயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட அலவுதீன் மொஹமட் முவாத் என்பவரின் தந்தையை அனைத்து குற்றங்களில் இருந்து விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீ ராகலவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றரை வருட காலமான குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.