செங்கை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம்

254 0

ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை வரும் செப்டம்பர் மாதம்15-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் அதனுடன் இணைந்திருந்த 9 மாவட்டங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளும் தொண்டர்களை தயார்படுத்தி வருகின்றன.