3 வயது சிறுவன் ஒருவன் உயிரிந்த நிலையில் சடலமாக மீட்பு

165 0

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி காங்கேயனோடை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து 3 வயது சிறுவன் ஒருவன் நேற்று (31) மாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேயனோடை பத்ரு பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 3 வயதுடைய முஹம்மத் ரிழ்வான் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்படடார்.

குறித்த சிறுவனின் தாய் சம்பவதினமான நேற்று மாலை குளித்து விட்டு வீட்டில் வந்து பார்த்தபோது சிறுவன் படுத்து கிடந்ததாகவும் சிறுவனுக்கு மேல் வீட்டிலுள்ள மேசை மின்விசிறி ஒன்று விழுந்து கிடப்பதை கண்டுள்ளார்.

சிறுவனை எழுப்பிய போது சிறுவன் எழுப்பாத நிலையில் அயலவர்களின் உதவியுடன் சிறுவனை ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் உயிரிழந்து விட்டான் என்று வைத்திசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றதுடன் சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.