இராணுவ பேருந்து மோதி இருவர் பலி! – மூவர் படுகாயம்

153 0

பொலநறுவை,மன்னம்பிட்டியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனாத் தொற்றாளர்களை அழைத்துச் சென்ற இராணுவ பேருந்தும் சுத்திகரிப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் ரக வாகனமுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் ஜீப்பில் பயணித்த பெண்களே உயிரிழந்துள்ளனர். குறித்த ஜீப்பில் 13 பேர் பயணித்துள்ளனர் என்று தெரியவருகின்றது.