நேற்று வாகன விபத்துக்களால் 10 பேர் பலி!

225 0

நாட்டில் நேற்றைய தினம் வாகன விபத்துக்களினால் 10 பேர் மரணித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் 6 பேர் உந்துருளிகளில் பயணித்தவர்கள் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், மூன்று பாதசாரிகளும், முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் இவ்வாறு உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.