யாழ்ப்பாண நூலக எரிப்புப் பற்றி சிங்கள மொழியில் “தீயில் வீழ்ந்த இறகுகள் ” என்ற காவியமொன்றை சந்தரஸீ சுது சிங்க எழுதியிருக்கிறார்.
யாழ் நூலக எரிப்பைப் பற்றி அவர் எழுதிய காவியத்தை விதர்ஷன வெளியீட்டு நிறுவனம் ஜூலை 31_இல் வெளியிடுகிறது.
சந்தரஸீ சுது சிங்க மாத்தறையில் பிறந்தவர். நூலகவியலிலும் தொல்லியல் ஆய்விலும் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் முன்னணிச் சிங்கள மொழிக்கவிஞர். மேலும் ” எனது யாழ்ப்பாணம்” எனும் கட்டுரைத் தொடர் எழுதியிருக்கிறார்.
இவரது ”தீயில் வீழ்ந்த இறகுகள்” என்ற நூலின் தமிழ், ஆங்கில மொழிப் பதிப்புகள் இன்னும் சில வாரங்களில் வெளிவரவுள்ளது.