“தீயில் வீழ்ந்த இறகுகள்” நூல் வெளியீடு ஜூலை 31

351 0

யாழ்ப்பாண நூலக எரிப்புப் பற்றி  சிங்கள மொழியில்தீயில் வீழ்ந்த இறகுகள்என்ற  காவியமொன்றை சந்தரஸீ சுது சிங்க  எழுதியிருக்கிறார்.

யாழ் நூலக எரிப்பைப் பற்றி அவர் எழுதிய காவியத்தை விதர்ஷன வெளியீட்டு நிறுவனம் ஜூலை 31_இல் வெளியிடுகிறது.

சந்தரஸீ சுது சிங்க மாத்தறையில் பிறந்தவர். நூலகவியலிலும் தொல்லியல் ஆய்விலும் பட்டம் பெற்றிருக்கிறார். இவர்  முன்னணிச் சிங்கள மொழிக்கவிஞர். மேலும் ” எனது யாழ்ப்பாணம்” எனும் கட்டுரைத் தொடர் எழுதியிருக்கிறார்.

இவரது ”தீயில் வீழ்ந்த இறகுகள்” என்ற நூலின் தமிழ், ஆங்கில மொழிப் பதிப்புகள் இன்னும் சில வாரங்களில் வெளிவரவுள்ளது.