ஜேர்மன் பிரஜையொருவர் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார்!

165 0

சில காலமாக அளுத்கம – மொரகல்ல பிரதேசத்திலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் வசித்துவந்த 78 வயதான ஜேர்மன் பிரஜையொருவர் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார்.

அவர் சில காலமாக இருதய நோய் தொடர்பில் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுவந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, பிரேத பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

நேற்று பிற்பகல் சடலம் கொவிட் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டதாகவும், அதன் பெறுபேறுகள் இன்று கிடைக்கப்பெறும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.