தெல்லிப்பளை பிரதேச செயலக ஊழியர்களுக்கு கொரோனா!

185 0

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,

பிரதேச செயலக திட்டமிடல் பிரிவில் கடமையாற்றும் அச்சுவேலி பகுதியை சேர்ந்த உத்தியோகஸ்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து , பிரதேச ஏனைய ஊழியர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 10க்கும் மேற்பட்ட உத்தியோகஸ்தர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அதனை அடுத்து தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.