காலி – கல்வட்டுகொட பிரதேசத்தில் பெண்ணின் சடலம் மீட்பு!

216 0

காலி – கல்வடுகொட பகுதியில் உள்ள காணியொன்றிலிருந்து இன்று(25) பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர், மடபாதல பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான பெண்ணொருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் நேற்று பிற்பகல் வீட்டை விட்டு வெளியேறியிருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, சடலத்தை மீட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.