யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் சந்தேக நபர்களுக்கு அடுத்த மாதம் வரை விளக்கமறியல்(காணொளி)

338 0

university-caseயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிஸ் சந்தேக நபர்களுக்கும் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும், இன்றையதினம் யாழ்ப்பாண மேல்நீதிமன்ற பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த 5 பொலிஸ் சந்தேக நபர்களுக்கும், அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.