முல்லைத்தீவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் குறித்து விசாரணை

164 0
தமிழ்த் தேசிய வீரர்கள் தினம் ஜூலை 25 தொடக்கம் 27 வரை நினைவுகூரப்பட்டு வரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதில் பல பதாகைகள் கிழித்து எறியப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான கண்காணிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் ஏற்பாட்டில், வெலிக்கடை சிறைப்படுகொலையின் போது உயிரிழந்த குட்டிமணி, தங்கத்துரை உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளின் 38ஆம் ஆண்டு நினைவேந்தலை அனுஷ்டிக்கும் வகையில் இந்த பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளன.