எதிர்வரும் திங்கட் கிழமை ஆரம்பிக்கவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் செயன்முறை பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து விலக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பள பிரச்சினை தொடர்பில் அரசு இதுவரையில் சரியான தீர்மானம் தராத காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

