டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

385 0

டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமான குறித்த போராட்டம் பேரணியாக , புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.