மன்னாரில் பெண் ஒருவர் கொரோனாவுக்குப் பலி

170 0

மன்னாரில் உயிரிழந்த வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

72 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

அவருடைய மாதிரி நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.