தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 189 பேர் கைது!

213 0

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 189 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம்  முதல் தனிமைப்படுத்தல் விதிகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டதன் பின்னர், இதுவரையான காலப்பகுதினுள் 51, 581 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் நீண்ட வாரஇறுதி விடுமுறையில், மக்கள் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.