துப்பாக்கிதாரி கருப்பின முன்னாள் இராணுவ வீரர்

364 0

1467952381_451711_hirunews_thai-bombஐந்து அமெரிக்க காவல்துறை அதிகாரிகளை ஸ்னைப்பர் துப்பாக்கியின் மூலம் சுட்டுக்கொன்ற கறுப்பினத்தவருக்கு, வெள்ளையின காவல்துறையினரை கொலை செய்யவேண்டும் என்ற எண்ணமே இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் இரண்டு கறுப்பினத்தவர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொள்ளப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் டளஸ் மாநிலத்தில் கறுப்பினத்தவர்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 5 வெள்ளையின காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் 6 பேர் காயமடைந்தனர்.
கறுப்பின ஸ்னைப்பர் துப்பாக்கிதாரி ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினரால் நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் குறித்த ஸ்னைப்பர் தாக்குதல்தாரியும் கொல்லப்பட்டார்.
இந்தநிலையில், வெள்ளையின காவல்துறை அதிகாரிகளை கொலைசெய்யும் நோக்கத்துடனேயே அவாகள் செயற்பட்டதாக நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த தாக்குதலை நடத்தியவர், கறுப்பின முன்னாள் படைவீரர் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.