இந்தோனேசியாவில் நெரிசல் – 12 பேர் பலி

381 0

08-jul-horrible-trafficஇந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் வாகன நெரிசல் காரணமாக இதுவரை 12 பேர் மரணித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உடலின் அதிக சக்தி வீண்விரயம் மற்றும் வியர்வை வெளியேற்றத்தினால் உடலில் நீரின் அளவு குறைவடைதல் போன்ற காரணங்களால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரமழான் நோன்பு காலப்பகுதியில் இடம்பெறும் நோன்பு நிறைவேற்றும் சமய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக செல்லும் மக்களே வாகன நெரிசல்களுக்குள் சிக்கி மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை விஷமானதால் கைக்குழந்தை ஒன்றும் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணங்கள் அனைத்தும் கடந்த 3 நாட்களுக்குள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.