தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு இடையே மோதல்

245 0

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ப.மயூரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

அமர்வின் போது யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தில்
உக்காத கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

விவாதத்தின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகம் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கருத்து மோதல் இடம்பெற்றதன் காரணமாக சபையில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.