அகதி அந்தஸ்து விடயம் – கடுமையான கொள்கையுடன் சுவிட்சர்லாந்து

396 0

swiss_sa_largeஇலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்தை வழங்குதில் மேலும் பல கடுமையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சுவிஸின் குடிவரவு செயலகத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் அரசியல் சமூக ரீதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
எனவே ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் அகதிகளாக விண்ணப்பிப்பதற்கு கட்டுப்பாடுகளை கொண்டு வரவுள்ளதாக அந்த நாட்டின் குடிவரவு செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டின் மே மாதம் வரையான காலப்பகுதியில் ஆயிரத்து 316 இலங்கையர்கள் அகதி அந்தஸ்து கோரியுள்ளனர் என்றும் அந்த செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சுவிஸ் அரசாங்கத்;தின் இந்த நிலைப்பாட்டை தமிழர் தரப்புக்கள் ஏற்க மறுத்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு திரும்புவோர் தொடர்ந்தும் சித்திரவதைகளுக்கு உள்ளாவதாக சுவிஸின் தமிழர் சார்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.