கனடா செல்ல முற்பட்ட 4 பேர் கைது

385 0

201605031655080212_Former-LTTE-operatives-arrested-in-Sri-Lanka_SECVPF.gifபோலியான ஆவணங்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட நான்கு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று கட்டுநாயக்க வானுர்தித்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் மற்றும் இளவாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளே, கைது செய்யப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் மூவர் சகோதர சகோதரிகள் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.