சர்வதேசத்திற்கு இடமில்லை – ஜனாதிபதி மைத்திரி

414 0

10923596_10152949433231327_7512115470182579750_nதாம் ஜனாதிபதி பதவியில் இருக்கும்வரை சர்வதேச நீதிமன்றங்களுக்கோ நீதிபதிகளுக்கோ நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாணதுறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
இறுதிக்கட்ட போரின் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த எந்த வகையில் யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அதற்கு இடமளிக்க போவதில்லை.
நாட்டின் சுதந்திரத்துக்கும் ஆட்புல எல்லை ஒருமைப்பாட்டுக்கும் சவால் ஏற்படும் வகையில் அமையும் எந்தவொரு தேசிய அல்லது சர்வதேச நடவடிக்கைக்கும் இடமில்லை.
மேலும் அரசியல்யாப்பில் பௌத்த சமயத்திற்கு உரிய இடத்தை பலப்படுத்துவதற்கும் வளப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்