முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட வள்ளுவர்புரம் கிராமத்தில் இளைஞர் குழு ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் இளம் குடும்ப பெண்ணொருவர் இரண்டு ஆண்கள் என மூவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்,,
13.07.2021 அன்று வள்ளுவர்புரம் கிராமத்தில் இளைஞர் குழுக்கழுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள் வெட்டாக மாறியுள்ளது. கஞ்சா பாவனையில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் குழு அங்கிருந்த உந்துருளிகள்,பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்தியுள்ளதுடன் இளம் குடும்பபெண் ஒருவர் மீதும் மேலும் இரண்டு ஆண்கள் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளது.
இதன் போது படுகாயமடைந்த இளம் குடும்ப பெண் மற்றும் இரண்டு ஆண்கள் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மூவரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டுள்ளார்.
வாள்வெட்டுடன் சம்மந்தப்பட்ட 5 பேரை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலும் பலரை கைதுசெய்யவுள்ளதாகவும் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
வள்ளுவர்புரம்,றெட்பான,கிராமங்களில் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா பாவனை அதிகரித்து வருவதாகவும் இவர்களால் பல்வேறு சமூக விரோத செயல்களும் பெண்கள் மீதான சேட்டைகளும் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

