அடுத்த வாரம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகப்பட்ச விலைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அத்தியாவசியப்பொருட்களுக்கு வெட் எனப்படும் பெறுமதிசேர் வரி விதிக்கப்படாது என அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாவட்டத்துக்கு மாவட்டம் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
இந்தநிலையில், அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகூடிய விலைகள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அத்தியாவசிய பொருட்களுக்கான வெட் வரி நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை வைத்து சிலர் அரசாங்கத்தை வீழ்த்த முற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வியாபாரிகளுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

