பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜே 401 பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு வீதியை தனிமை படுத்துமாறு சுகாதார பிரிவினரால் சிபாரிசு செய்யப்பட்டு யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
இன்று அப்பகுதியில் எழுமாறாக 60 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியினை தனிமைப்படுத்துமாறுசுகாதார பிரிவினரால் யாழ் மாவட்ட கொரோனாதடுப்பு செயலணியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் இன்று சனிக்கிழமை இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் எழுமாறாக 60 பேரிடம் அதிவிரைவு அன்டிஜன் முன்னெடுக்கப்பட்டது.
அவர்களில் 23 பேருக்கு கோவிட் -19 நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட்-19 நோயாளிகளை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

