பல்லவன் பணிமனை உள்ளிட்ட மாநகரில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்படும் பஸ்களில் இந்த பலகை பொருத்தும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 19 ஆயிரத்து 700 பஸ்களில் 14 ஆயிரத்து 215 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பஸ்கள் தற்போது இயக்கப்படவில்லை.
இந்த பஸ்கள் தற்போது 50 சதவீதம் இருக்கைகளுடன், மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் அரசு விதித்துள்ள வழிக்காட்டு முறைகளான கட்டாய முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பயணித்து வருகின்றனர்.
முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் அனைத்து அரசு பஸ்களில் பலகைகளில் எழுதப்பட்ட திருக்குறளுடன் விளக்க உரையை பஸ்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது. பல்லவன் பணிமனை உள்ளிட்ட மாநகரில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்படும் பஸ்களில் இந்த பலகை பொருத்தும் பணி நடந்து வருகிறது. அடுத்த 10 நாட்களில் இந்த பணி முற்றிலுமாக நிறைவடையும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

