தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 417 பேர் கைது!

385 0

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 47,240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், நேற்று (03) கம்பளையில் 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டியில் 52 பேரும், மாத்தளையில் 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்த 165 பேரும் திருப்பி அனுப்பப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.