சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடம் வந்து, உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஆக்கி மைதானத்தில் நேற்று முன்தினம் உடல் முழுவதும் எரிந்த நிலையில் மாணவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடம் வந்து, உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த மாணவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்து கிடந்தவர் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் (வயது24) என்பதும், சென்னை ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரிக்கல் துறையில் ஆராய்ச்சி மாணவராகவும், திட்ட கவுரவ விரிவுரையாளராகவும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து மாணவர் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.