நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
சுகாதாரத் துறையினரின் அனுமதியின்கீழ், 100 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை, இந்த மாதத்திற்குள் திறப்பது குறித்து அவதானம் செலுத்துவதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

