யாழ். இந்தியத் துணைத்தூதருக்கு பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் பாராட்டு

273 0

யாழில் இந்தியத்துணைத் தூதராக தற்போது பணியில் இருக்கும் பாலச்சந்திரன் அவர்கள் தென்னமெரிக்காவின் இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் சூரினாம் நாட்டுக்கு இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டமைக்கு பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

கடந்த மூன்று ஆண்டுகள் யாழில் இந்திய துணைத்தூதராகப் பணியாற்றி வரும் இவர், சூரினாம் நாட்டிற்கு தூதராக மட்டுமின்றி கரீபியன் நாடுகளான பார்படோஸ், செயின்ட் லூசியா மற்றும் செயின்ட் வின்சென்ட் மற்றும் தி கிரெனேடின்ஸ் போன்ற மூன்று நாடுகளுக்கும் சேர்த்து உயர் ஆணையாளராக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்பதும் பாராட்டத்தக்கது என்றார்.

அத்தோடு, தற்பெருமையற்ற பரந்த மனப்பான்மையோடு தனது நற்சேவையை யாழ்ப்பாண மக்களுக்காக வழங்கியமைக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கிறேன் என்றார்.