தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.
தமிழகத்தின் 30-வது டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
புதிய டிஜிபி சைலேந்திர பாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து திரிபாதி வாழ்த்துகளை தெரிவித்தார். இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது:
* காவல்துறையின் தலைமை பொறுப்பை வகிப்பது அரிய சந்தர்ப்பம்.
* தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும்.
* அரிய வாய்ப்பு தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.