தனிமைப்படுத்தல் விதிகளை மீறி திருமணத்தை நடத்திய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

373 0

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி திருமணத்தை நடத்திய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பாணந்துறை வடக்கு பல்லேமுல்ல பகுதியில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 12 ஆண்கள் 8 பெண்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார விதிமுறைகளை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் குறித்த நபர்கள் 14 நாட்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர், பொலிஸாரால் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.