நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (28) மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று(29) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 24 பெண்களும் 21 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,030 ஆக அதிகரித்துள்ளது.

