5000 ரூபாய் கிடைக்காதவர்களுக்கு வழங்க நடவடிக்கை

301 0

சமுர்த்தி பயனாளர்களை தவிர்த்து ஏனையவர்களுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பயணக்கட்டுப்பாடு காரணமாக முழுமையாக வருமானத்தை இழந்த நபர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து சமூர்த்தி பயனாளர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும் 5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கவில்லை என கூறி தொடர்ந்து பல தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க கோரி பாணத்துறை, பின்வத்தை மீனவர்கள் பலர் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.