சிறைச்சாலை கைதி ஒருவர் உண்ணாவிரதம்

235 0

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலைகளின் கைதிகள் சிலர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

அதற்கு ஆதரவு தெரிவித்து பூசா சிறைச்சாலையில் கைதி ஒருவர் இன்று (26) உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையான மாற்றுமாறு கோரி அவர் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.