மட்டக்களப்பு- ஆயித்தியமலையில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு

188 0

மட்டக்களப்பு- ஆயித்தியமலை, முள்ளாமுனை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆயித்தியமலை தெற்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தியாகராசா சுரேஸ்கரன் (32 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இவர் ஆயித்தியமலையிலுள்ள தனது வீட்டிலிருந்து வவுணதீவு சுகாதார அலுவலகத்திற்கு தனது மோட்டார் சைக்கிளின் ஊடாக பயணம் மேற்கொண்டப்போது முள்ளாமுனை பகுதியில் வைத்து குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.