பழைய காடு தோட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா

195 0

ஹப்புத்தளை பெருந்தோட்டப்பிரிவில் (இன்று) 25-06-2021ல் ஒன்பது பேருக்கு, கோவிட் – 19 தொற்று உறுதியாகியிருப்பதாக, ஹப்புத்தளை பொது சுகாதாரப் பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்தார்.

ஹப்புத்தளை தோட்ட ‘பழைய காடு’ பிரிவில் மேற்கொள்ளப்பட்டிருந்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையிலேயே, தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மேற்படி தோட்டப் பிரிவில், அண்மையில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமையினால், அத்தோட்டப் பிரிவிற்கு அம்புலன்ஸ் வாகனம் செல்லாமல், பிரதான பாதையில் நிறுத்தப்பட்டு, தொற்று அடையாளம் காணப்பட்ட ஒன்பது பேரும் பிரதான பாதைக்கு வரவழைக்கப்பட்டனர்.

அங்கிருந்து அவர்கள் ககாகொல்லை கோவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்.