எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு – நாடாளுமன்றில் குழப்பம்!

193 0

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாராத்திற்கான நாடாளுமன்ற அமர்வு இரண்டாவது நாளாக இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.