மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கடலாமையொன்று கரையொதுங்கியுள்ளது

207 0

மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் இன்று (20) ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை கடலாமையொன்று கரையொதுங்கியுள்ளது.

இவ்வாறாக இறந்த நிலையில் கடலாமையொன்று கரையொதுங்கி உள்ளதாக அப்பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்கள் வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கல்லடி வனஜீவராசிகள் அலுவலகத்தின் அதிகாரி குறித்த இடத்திற்கு விரைந்து உயிரிழந்த கடலாமையை மீட்டுஇ கடல்வாழ் உயிரினங்களை அம்பாரை வனஜீவராசிகள் மிருக வைத்திய பிரிவிற்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன்இ உடற்கூற்று பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டதன் பின்னர் குறித்த உடற்கூற்று அறிக்கை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.