லிந்துலை – தலவாக்கலை நகர சபைத் தலைவர் கைது

191 0

லிந்துலை – தலவாக்கலை நகர சபைத் தலைவர் மற்றும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த 7 பேரும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலவாக்கலை பகுதியில் உள்ள மண்டபம் ஒனறில் நிகழ்வு ஒன்றை நேற்று (20) நடத்தியமைக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.