யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமான கோபுரம் ஒன்று சரிந்து விழுந்தது (காணொளி)

331 0

towerயாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமான கோபுரம் ஒன்று சரிந்து விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வீழ்ந்த ரெலிகொம் நிறுவனத்திற்கு கோபுரமானது நீண்டகாலமாக பயன்படுத்தப்படாத நிலையில் பாகங்களாக பிரிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வந்தன.

180 அடி உயரமான பயன்படுத்தப்படாத கோபுரத்தின் கூடுதலான பாகங்கள் அகற்றப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் குறித்த கோபுரம் விழுந்துள்ளது.

வீழ்ந்த கோபுரம் வீதிக்கு குறுக்காக கோட்டைப் பக்கமாக வீழ்ந்த காரணத்தினால் பாதிப்புக்கள் மற்றம் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை.

உதிரிப்பாகங்களாக்கம் வேலையில் ஈடுபட்டிருந்த ரெலிகொம் பணியாளர்கள் மதிய போசனத்திற்கு சென்றிருந்த நிலையில் குறித்த கோபுரம் சரிந்து விழுந்துள்ளது.

சரிந்து விழுந்ததன் காரணமாக வீதியால் சென்ற பெண்மணி ஒருவருக்கு அதன் கம்பிகள் கிழித்து சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.