சுகாதார வழிமுறைகளுடன் இடம்பெற்ற வவுனியா நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா

257 0

வரலாற்று சிறப்புமிக்க வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஆலய நிர்வாகத்தினரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

400 வருடங்களுக்கு மேல் பழமையான புதுமை மிகு புதூர் நாகதம்பிரானின் அருளினைப் பெறுவதற்காகவும், நிவர்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காகவும் பக்தர்கள் வருகை தந்த போதும், கோவிட் – 19 தாக்கம் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புதூர் ஆலய உற்சவத்திற்கு நிர்வாகத்தினர் 22 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பயண கட்டுப்பாடுகளை மீறி ஆலயத்திற்கு வருகை தந்தவர்களை பொலிஸாரும், பொது சுகாதாரப் பரிசோதகர்களும் திருப்பி அனுப்பியுள்னனர்.

அத்துடன், புதூர் நாகதம்பிரான் ஆலய வீபூதி, நூல் மற்றும் விசம் தீண்டியவர்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும் புதூர் நாகதம்பிரான் ஆலய மண் என்பவற்றையும் ஆலய நிர்வாகனத்தினர் ஆலயத்தின் நுழைவாயிலில் வைத்து வழங்கி வருகின்றனர்.

ஆலயத்தில் நிர்வாகத்தை சேர்ந்த 22 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுகாதாரப் பிரிவினர் 17 பேரும், பிரதேச சபை ஊழியர்கள் 7 பேரும், பொலிஸார் 10 பேரும் காண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.