சபுகஸ்கந்த சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு

303 0

சபுகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவு எண்ணெய் நீரில் கலந்துள்ள சம்பவம் குறித்து கண்டறிவதற்காக விசேட விசாரணை குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்குவதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு 14 நாட்களுக்குள் அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

எரிசக்தி அமைச்சர் நியமித்துள்ள இந்த குழுவிற்கு உபுள் வீரசேகர தலைமை தாங்குகின்றார்.

அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளரான நயனா சேனாரத்ன, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கை முகாமையாளர் மேனக்க ஜீவசிரி மற்றும் சட்டத்தரணி கஹத்துடுவ ஆகியோர் இதன் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்..