மல்லாவியில் பயணத்தடையை மீறுவோருக்கு எச்சரிக்கை

251 0

நாடுமுழுவதும் பயணத்தடை அமுலில் இருக்கும் வேளையில் வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய குறிப்பாக தேவையற்ற பயணங்களை மேற்கொள்வோரை மல்லாவி பொலிஸார் எச்சரிக்கை செய்து அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மல்லாவி நகருக்குள் நுழையும் பொது மக்கள் அனைவரிடமும் மல்லாவி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து குறித்த பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

அரசு நிறுவனங்களில் கடமை புரிவோர், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனையோர் அனைவரும் எச்சரிக்கை செய்த பின்னர் அனுப்பப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.