திருகோணமலை இறக்ககண்டி பகுதியில் விமானப்படை விமானமொன்று அவசரத் தரையிறக்கம்

205 0

இலங்கை விமானப்படை விமானிகளின் அடிப்படை பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்ட செஸ்னா 150 எனும் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருகோணமலை நிலாவெளி கடற்கரைக்கு அருகிலுள்ள இறக்ககண்டி பகுதியில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது.


இன்று காலை 10.22 மணியளவில் திருகோணமலையிலுள்ள விமானப்படைத்தளத்திலிருந்து புறப்பட்ட விமானம் காலை 10.48 மணியளவில் தரையிறங்கியதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

இதனால் விமானிகளால் விபத்தை தவிர்க்க முடிந்ததுடன் இரு விமானிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.