மட்டக்களப்பில் நாளை முதல் தடுப்பூசி ஏற்று நடவடிக்கை -பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன்

247 0
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் அபாய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னனுரிமை அடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு காரியாலயங்களில் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது என இன்று திங்கட்கிழமை (07) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் பிரிந்துரைக்கமைய 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றவேண்டிய கட்டாயமாகும்.
நாளை 25 ஆயிரம் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளது இதில் அபாய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.